​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நியாயத்திற்கு மட்டுமே பல்லக்கு தூக்க வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு

Published : May 06, 2022 1:01 PM

"நியாயத்திற்கு மட்டுமே பல்லக்கு தூக்க வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு

May 06, 2022 1:01 PM

தருமபுர ஆதினம் பட்டினப் பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனமும் குளிரும் வகையில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மண்டல அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துக்கொண்டார்.

பிறகு, தருமபுர ஆதீனத்திற்கு நானே பல்லக்கு தூக்குவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், யாருக்கும் பல்லக்கு தூக்க கூடாது , நியாயத்திற்கு மட்டுமே பல்லக்கு தூக்க வேண்டும் என்றார்.